» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆயுதப்படை காவல்துறையினர் ஒத்திகை பயிற்சி!

சனி 7, செப்டம்பர் 2024 7:52:34 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான (Mob Operation Parade) ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் இன்று (07.09.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை காவல் துறையினரின் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான Mob Operation Parade ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
 
இப்பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  காவலர்கள் கலவர கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் எனவும், கலவரம் நடக்கும்போது காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் அதற்கான வழி முறைகளையும் காவலர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கம் அளித்தார். மேலும் பணியின் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
 
இந்த பயிற்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory