» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொர்ணமலை கிரிவலப்பாதையில் மரம் நடும் விழா

சனி 27, ஜூலை 2024 3:58:02 PM (IST)



கோவில்பட்டி சொர்ணமலை கிரிவலப்பாதையில் ரோட்டரி சங்கத்தினர் 200 மரக்கன்றுகளை நட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ண மலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் கிரிவலப் பாதையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் வனத்துறையுடன் இணைந்து 200 மரக்கன்றுகளை நட்டினர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதர கண்ணன் தலைமை வகித்தார்.

வனத்துறை வனவர் பேச்சிமுத்து, ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிமாணிக்கம், கிருஷ்ணசாமி, மாரியப்பன்,ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory