» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் ஒரு நாள் தொல்லியல் பயிற்சி பட்டறை

சனி 27, ஜூலை 2024 3:49:06 PM (IST)



ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒரு நாள் தொல்லியல் பயிற்சி பட்டறை நடந்தது. 

இதில் தெற்கு கள்ளி குளம் திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து நடத்திய இந்த பட்டறையில் மரபு நடை பயணமும் நடந்தது. இதில் நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம், சிவகளை உள்பட பகுதியில் மாணவர்கள் மரபு நடை பயணம் மேற்கொண்டனர். 

கிருஷ்ணாபுரத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடம் கலை சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். ஆதிச்சநல்லூரில் நடந்த பயிற்சி பட்டறைக்கு தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் கிரிஜா தலைமை வகித்தார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சிவகளைதொல்லியல் கழக நிறுவனர் சிவகளை மாணிக்கம், பாளை சேவியர் கல்லூரி தொல்லியல் பிரிவை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் பேசினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் சோனா கிறிஸ்டி, சவரி ராயம்மாள், கிரேஸ் புஷ்பா ஜுலியட், ராதா ருக்மணி, வணிக நிர்வாகிவியல் தலைவர் செல்வகுமார், ஜெமிலா, தஸ்லிமா பீவி , சேவியர் கல்லூரி தமிழ்த்துறையை சேர்ந்த இளங்கோ மணி, விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முருகவேல் இணைத்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory