» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி செட் உரிமையாளரிடம் பண மோசடி செய்தவர் கைது!

சனி 27, ஜூலை 2024 11:04:26 AM (IST)

தூத்துக்குடி லாரி செட் உரிமையாளரிடம் பண மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் விஜயகுமார் (45). இவர் லாரி செட் வைத்துள்ளார். இவரிடம் தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த அருணாசலம் மகன் அருண்குமார் (39), என்பவர் தான் தனியார் சீட்டு கம்பெனியில் வேலை பார்ப்பதாகும் நீங்கள் 38ஆயிரம் பணம் கட்டினால் 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று கூறினாராம்.

இதை நம்பி விஜயகுமார் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.38000 கொடுத்தாராம். ஆனால் 3 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்கவில்லையாம். பல தடவை கேட்டும் பணம் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் மோசடி வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory