» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது தாக்குதல் : வாலிபர் வெறிச்செயல்!

சனி 27, ஜூலை 2024 10:42:26 AM (IST)

ஆறுமுகநேரில் காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் விநாயகம் மகன் சிவசுப்பிரமணியன் (23), இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லையாம். 

இதனால் ஆத்திரம் அடைந்த சிவ சுப்பிரமணியன் அந்த பெண் கல்லூரிக்கு செல்வதற்காக ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து கம்பால் தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் காயல்பட்டனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் பிரபு குமார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியனை தேடி வருகிறார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory