» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்: 6பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சனி 27, ஜூலை 2024 10:24:59 AM (IST)

தூத்துக்குடியில் ராயன் படம் ரிலீசாகியுள்ள தியேட்டரில், மேலாளரை தாக்கிய தனுஷ் ரசிகர்கள் 6பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடியில் சிவன் கோவில் தெருவில் உள்ள தியேட்டரில் தனுஷ் நடித்த ராயன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. நேற்று இரவு காட்சிக்கு வந்த ரசிகர்கள் 6பேர் மது போதையில் இருந்ததாக கூறி தியேட்டர் மேலாளர் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் சதீஷ்குமார் (33) என்பவர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டாராம். 

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தியேட்டர் மேலாளரை தாக்கி அவர் மீது பைக்கை மோதி கொலை செய்ய முயன்றார்களாம். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 6பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory