» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: சிறுவன் உட்பட 3 பேர் கைது

வெள்ளி 26, ஜூலை 2024 10:41:39 AM (IST)

கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் ரிஷி (19). கோவில்பட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவரும், இவரது சகோதரரும் நேற்று முன்தினம் பசுவந்தனை பிரதான சாலை விலக்குப் பகுதியில் நடந்து சென்றபோது சாத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த மகேந்திரன் மகன் ஜெயசூர்யா (19), கீழ பாண்டவர்மங்கலம் தெற்கு காலனி சுரேஷ்குமார் மகன் கௌதம் (19) , கோவில்பட்டி கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் சிறுவன் ஆகியோர் சேர்ந்த இருவரையும் வழிமறித்து, சாலை ஓரத்தில் கிடந்த வேலி கம்பை எடுத்து அவர்களை தாக்கினராம்.

அவ்வழியேச் சென்றவர்கள் தட்டிக்கேட்டதால் 3 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனராம். இதில் காயமடைந்த ரிஷி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின் புதூர் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory