» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி!

வெள்ளி 26, ஜூலை 2024 10:39:29 AM (IST)

திருச்செந்தூரில் அரசுப் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோயில் வாசல் பேருந்து நிலையத்திலிருந்து பகத்சிங் பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில், தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த நடத்துனர் சந்திரன் (44), மங்கம்மா சாலை, மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன் (49) ஆகியோர் பணியில் இருந்தனர்.

இந்த பேருந்து ரயில்வே நிலைய விலக்கு அருகே வந்தபோது, சுமார் 55 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத ஆண், பேருந்தின் இடது பக்க பின் சக்கரத்தில் விழுந்தாராம். இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory