» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றங்கரையில் மரங்கள் நடவேண்டும் : அமைச்சரிடம் எழுத்தாளர் கோரிக்கை!

வெள்ளி 26, ஜூலை 2024 9:17:41 AM (IST)



தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை சீர் செய்து மரம் நட்டு தரவேண்டும் என்று அமைச்சரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி பற்றி அதிகமான நூல் எழுதியவர். இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு ஒன்றை நேரில் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த தமிழக அரசு நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.   இதற்காக கடந்த மாதம் கலியாவூரில் இந்த பணியை மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமிபதி தலைமையில் நமது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். அந்த பணி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் அந்த இடம் மிகப்பெரிய இடம். 

மேலும், தாமிரபரணி பணி செய்வது பெரிய அளவில் மக்கள் மத்தியில் தெரிந்து பிரபலமாகாது. எனவே தயவு கூர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆழ்வார்திருநகரி பாலம் வரை  இருகரையில் உள்ள முள்செடிகளையும், தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளையும் அமலைசெடிகளையும் அகற்றி, மரங்கள் நட வேண்டும். இதற்காக பலர் உதவ  உள்ளனர் அவர்கள் அனைவரையும்  ஒருங்கிணைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  பாராம்பரியமிக்க வைணவத்தலங்களில் முதல் திருப்பதி (ஸ்ரீவைகுண்டம்) யில் இருந்து கடைசி திருப்பதி (ஆழ்வார்திருநகரி) வரை  சுத்தம் செய்து நாம் பத்திரிக்கையில் விளம்பரம் படுத்தினால், தொடர்ந்து மற்ற பகுதியிலும் சுத்தம் செய்ய  தன்னார்வ தொண்டர்கள் முன்வருவார்கள். அப்போது நாம் தாமிரபரணி பணியை  செம்மையாக செய்ய ஏதுவாக இருக்கும்.  எனவே அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவண செய்வதாக உறுதிய‌ளித்தார். மேலும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம் 3 19ம் நூற்றாண்டு ஆசான்கள் என்ற நூலை அமைச்சரிடம் எழுத்தாளர் அறிமுகம் செய்தார். இந்த நூலின் வாழ்த்துரையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory