» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் சேமிப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

வெள்ளி 26, ஜூலை 2024 9:06:54 AM (IST)



நாசரேத்தில் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளைசார்பில் சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும், தேவையற்ற செலவுகளை குறைத்தல் மற்றும் சிக்கனத்தை உருவாக்கி சேமிப்பை அதிகரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம்  சார்பாக  தூத் துக்குடி மாவட்டம் நாசரேத் ஜோதி மஹாலில்  வைத்து சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும்,தேவையற்ற செலவுகளை குறைத்தல் மற்றும் சிக்கனத்தை உருவாக்கி சேமிப்பை அதிகரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமி னை கிராம உதயம் நிறுவனரும், இயக்குனருமான டாக்டர் வி.சுந்த ரேசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து தேவையற்ற செலவுகளை குறைத்தல் மற்றும் சிக்கனத்தை உருவாக்கி சேமிப்பை அதிகரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சியை துவக்கி வைத்தார். 

மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தின்  நிர்வாக கிளை மேலாளர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் இராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கிராம உதய  பகுதி பொறுப்பாளர்கள் ஆறுமுக வடிவு, பிரேமா, முருகசெல்வி, அந் தோணியம்மாள், முத்துமாலை, பூலம்மாள்,திலகவதி, உல்தா, புஷ்பா, பாப்பா,சுமித்ரா, கருத்துரை வழங்கினர்.நிறைவாக ஆனந்த செல்வன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 350-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory