» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை!!
வியாழன் 25, ஜூலை 2024 12:26:48 PM (IST)
தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் வரதவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகள் முத்துலட்சுமி தர்ஷினி (17). பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி பள்ளிக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.