» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு!

செவ்வாய் 23, ஜூலை 2024 11:03:14 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையோரம் பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் சாமிகண்ணு (72), சுப்பிரமணியம் மகன் பால்ராஜ் (64). இவர்கள் 2பேரும் பைக்கில் தூத்துக்குடி வந்துவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். பால்ராஜ் வண்டிய ஓட்டவே சாமிக்கண்ணு பின்னால் அமர்ந்திருந்தார். புதுக்கோட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க் முன்பு சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமிக்கண்ணு பரிதாபமாக இறந்தார். பால்ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory