» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி 14வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

செவ்வாய் 23, ஜூலை 2024 10:53:23 AM (IST)



தூத்துக்குடி 14வது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட செல்வ விநாயகர்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் கூறுகையில் "மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு ஓவ்வொரு பகுதிக்கும் தேவையான சாலைகள் கால்வாய்கள் மின்விளக்குகள் சீரான குடிநீா் போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. விடுபட்ட சில பணிகளையும் அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்து ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொிவித்தார்.

ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் காளிதுரை வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory