» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை கத்தியால் குத்திய நண்பர் கைது: தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

செவ்வாய் 23, ஜூலை 2024 10:34:28 AM (IST)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை மது போதையில் தாளமுத்து நகரை சேர்ந்த நண்பர்களான ராஜேஷ் (28) மற்றும் வைரம் (30) ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வைரம், ராஜேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வைரத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும், கத்திக்குத்தில் காயம் அடைந்த ராஜேஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்,போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory