» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வணிகவரி அலுவலக வளாகத்தில் திடீர் தீ : நடைபயிற்சி மேற்கொண்டோர் பாதிப்பு!

செவ்வாய் 23, ஜூலை 2024 10:17:37 AM (IST)



தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்கா அருகே உள்ள வணிகவரி அலுவலக வளாகத்தில் திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததால் நடைபயிற்சி மேற்கொண்டோர் பாதிக்கப்பட்டனர். 

தூத்துக்குடி கடற்கரை சாலையின் அமைந்துள்ளது முத்துநகர் கடற்கரை பூங்கா இங்கு அதிகாலை ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த பூங்கா அருகே வணிகவரித்துறை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் திடீரென காலை 7:30 மணிக்கு தீ பற்றி கரும்புகையுடன் சுமார் 30 அடி உயரத்திற்கு மேலே எழுந்தது. 

பின்னர் உள்ளே சென்று பார்த்தில் அங்கே உள்ள பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகளை  தீ வைத்து எரிந்தது. மேலும் தீ வைக்கப்பட்ட பகுதியில் அரசு வாகனங்கள் நின்ற நிலையில் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீ வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மேலும் முதற்கட்ட விசாரணையில் வணிக வளாக வாட்ச்மேன் கழிவு பொருட்களை எரித்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் கழிவுகளும் கூடிய கரும்புகை வெளியேறியதால் முத்து நகர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கரும்புகை காரணமாக சிறிது நேரம் பாதிக்கப்பட்டனர். காலை வேளைகளில் இவ்வாறு வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் கழிவுகளை எரிக்க கூடாது என நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory