» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை தரம் உயர்த்த வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

செவ்வாய் 23, ஜூலை 2024 10:11:14 AM (IST)



காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் ப்ரைமரி ஊழியர் கூட்டம் தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுக உரை ஆற்றினார். 

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹீம், மாவட்ட துணைத் தலைவர் அம்பா ஜாஃபர், நகர நிர்வாகிகளான ஏ.ஆர். தாஹா, என்.டீ. அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், காயல்பட்டினம் மண்ணின் மைந்தருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

தீர்மானங்கள் : காயல்பட்டினத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் கடந்த காலத்தில் செய்யப்பட்ட வார்டு மறுவரையறையை நீக்கிவிட்டு, ஒட்டுமொத்த ஊர் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் மீண்டும் முறைப்படி வார்டு மறு வரையறையைச் செய்திட வேண்டும்.

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடை தாழ்ந்த நிலையில் இருப்பதால் பயணிகள் திருச்செந்தூர் சென்று தொடர் வண்டியில் ஏறும் நிலை இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நடைமேடையை உயர்த்தித் தர வேண்டும். பயணியர் நலன் கருதி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடையை விரைவில் High Level Platform ஆக உயர்த்த வேண்டும்.

காயல்பட்டினம் கடற்கரையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், முழுப் பாதுகாப்போடும் தொடர்ந்து பராமரித்திடவேண்டும். காயல்பட்டினத்தில் போதைப்பொருட்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சமூக விரோதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory