» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா

திங்கள் 15, ஜூலை 2024 3:58:58 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு கல்வி வளர்ச்சி தின விழா நடந்தது. 

காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை வகித்தார். கோவில்பட்டி லிபர்டி நிறுவனங்களின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்லபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் பிறந்த தின விழா சிறப்புரையாற்றினார். 

கலைமாமணி இசை ஆசிரியை அமல புஷ்பம் காமராஜர் பிறந்த தின பாடல்களை பாடினார். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர் அம்புரோஸ். உதவி தலைமையாசிரியை உஷா ஜோஸ்பின் உள்பட பள்ளி ஆசிரியர்கள்,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளை தமிழாசிரியை கெங்கம்மாள் தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory