» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைப் பதவியேற்பு விழா
சனி 6, ஜூலை 2024 4:01:38 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் சங்கப் பேரவைப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக கல்லூரி ஆலயத்தில் அருட்தந்தை மரிய அரசு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னான்டோ, துணை முதல்வர் எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா, மரியின் ஊழியர் சபையின் இல்லத் தலைவி தெரசா மற்றும் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் ஜெனட் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தூத்துக்குடி மறைமாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரும், இனிகோ அச்சகம் மற்றும் மாதா தொலைக்காட்சி இவற்றின் இயக்குனருமான அருட்தந்தை கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அர்ப்பணிப்பு இரக்கம் உணர்வுகளை உள்ளடக்கிய நேர்மையான வாழ்வு வாழ வேண்டும் என்று சிறப்புரை வழங்கினார்.
மாணவர் சங்கப் பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவியர்கள் பதவி ஏற்றனர். கல்லூரியின் அனைத்து துறைகள் சங்கங்கள் மற்றும் மன்றங்கள் இவற்றின் பிரதிநிதிகள் தங்கள் திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
