» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

செவ்வாய் 2, ஜூலை 2024 8:37:08 PM (IST)



நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. 

நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜாஸ்மின் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர்,  சுகாதார ஆய்வாளர் ஞான்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி தலைமை ஆசிரியர் ஞானரதி வனிதா வரவேற்றார் ‌வெள்ளமடம்,  வாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ_ மாணவிகள் சுமார் 320 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிராம செவிலியர்கள்,  பள்ளி ஆசிரியர்கள், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இயக்குனர் நந்தகோபால் மற்றும் பணியாளர்கள்,  ஆசிரியர்கள் செய்திருந்தனர் ‌.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory