» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
செவ்வாய் 2, ஜூலை 2024 8:37:08 PM (IST)

நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜாஸ்மின் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் பெனிஸ்கர், சுகாதார ஆய்வாளர் ஞான்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஞானரதி வனிதா வரவேற்றார் வெள்ளமடம், வாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ_ மாணவிகள் சுமார் 320 பேருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிராம செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இயக்குனர் நந்தகோபால் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)
