» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி!

ஞாயிறு 30, ஜூன் 2024 7:07:42 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தலைமை ஆசிரியர் குணசீலராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உதவி காவல் ஆய்வாளர் வைகுண்ட தாஸ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிதம்பர மூர்த்தி, தலைமை காவலர் மணிகண்டேஸ்வரன் மற்றும் காவலர்கள், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் கையில் விழிப்பு ணர்வு பதாகைகள் ஏந்தியும், போதைக்கு அடிமையானால் மரணம் என்பதே காட்டும் வகையில் பாடையை தூக்கியும் , விதவைப் பெண் வேடம் அணிந்தும், போதைப் பொருள் ஒழிப்பு அச்சு பிரதிகளை கொடுத்தும் ஊர் மக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இப்பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் ஊர் பகுதிகளை சுற்றி வந்து முடிந்தது. இதற்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கிரேஸ் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல் மற்றும் ரீபைனர் மேஷாக் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory