» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பாஜக மூத்த தலைவரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கினைப் பதிவு செய்த எம்.ஆர். காந்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இந்த முறை எந்த ஒரு ஏற்பாட்டையும் ஒழுங்கான முறையில் செய்யவில்லை. பல இடங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முறையாகக் கிடைக்கவில்லை. தேர்தல் நிர்வாகத்தில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும், வாக்காளர்களுக்கு விரைவாக வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலின் போது ஒரு சட்டமன்ற உறுப்பினரே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்டவை:
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் நின்ற நடிகர் அஜித்குமார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:20:49 AM (IST)

வெற்றி மீது 100% நம்பிக்கை உள்ளது: சொந்த ஊரில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 10:51:31 AM (IST)

யாருக்கு ஓட்டு என்பதை வெளிப்படுத்தினால் சிறை : தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)







