» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!

வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 32.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி அது 37.56% ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத் தொகுதிவாரியான விவரம்:

அம்பாசமுத்திரம் 36.85% (அதிகபட்சம்)

திருநெல்வேலி 34.17%

நான்குனேரி 32.23%

ராதாபுரம் 32.04%

பாளையங்கோட்டை 29.81% (குறைந்தபட்சம்)

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிகபட்சமாக 36.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகர் பகுதியான பாளையங்கோட்டையில் மற்ற தொகுதிகளை விடக் குறைவாக 29.81 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இன்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory