» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை இணைக்கும் படகு போக்குவரத்து நாளை ஒரு நாள் மட்டும் செயல்படாது.
தேர்தல் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 24) முதல் வழக்கம் போலப் படகு சேவை தொடங்கும் எனப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரை பகுதிகளில் நின்று கடலின் அழகை ரசிக்கத் தடை ஏதுமில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் நின்ற நடிகர் அஜித்குமார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:20:49 AM (IST)

வெற்றி மீது 100% நம்பிக்கை உள்ளது: சொந்த ஊரில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 10:51:31 AM (IST)

யாருக்கு ஓட்டு என்பதை வெளிப்படுத்தினால் சிறை : தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)







