» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் எதிரொலி : குமரியில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலத்திற்கு படகு சேவை ரத்து!

புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை இணைக்கும் படகு போக்குவரத்து நாளை ஒரு நாள் மட்டும் செயல்படாது.

தேர்தல் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 24) முதல் வழக்கம் போலப் படகு சேவை தொடங்கும் எனப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாளை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரை பகுதிகளில் நின்று கடலின் அழகை ரசிக்கத் தடை ஏதுமில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory