» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கு: சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:55:41 PM (IST)
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில், தன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மனு மீது சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார், கடந்த 2025 ஜூன் 27-ஆம் தேதி நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணக்குப் பின் அவர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உட்பட மேலும் 4 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.
தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் "அஜித்குமாரிடம் விசாரணை நடத்திய பிறகு அவர் வெளியே சென்றார். அதன் பின் சிறப்பு விசாரணைக் குழுவினர்தான் அவரை அழைத்துச் சென்றனர். "சிறப்பு விசாரணைக் குழுவினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்தார்.
ஆனால், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் தேவையின்றி எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் அடிப்படையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆய்வாளர் ரமேஷ்குமாரின் மனு குறித்து சி.பி.ஐ. துணை காவல் கண்காணிப்பாளர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் தன் பெயரைச் சேர்த்த சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஆய்வாளர் ரமேஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக்கொலை விவகாரத்தில் தேர்தல் புறக்கணிப்பு : தடையை மீறி வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 70% வாக்குப் பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:23:28 PM (IST)

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் நின்ற நடிகர் அஜித்குமார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:20:49 AM (IST)







