» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

HInduMunnipetiton.jpg

தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவினை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ஸ்ரீநாத்திடம் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் இராகவேந்திரா, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 

ஆனால், இந்நாள் வரை கும்பாபிஷேகத் திருப்பணிகள் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன. திருப்பணிகள் நிறைவடையாத காரணத்தால், இத்திருக்கோவிலின் முக்கியத் திருவிழாவான ‘ஐந்து கருட சேவை’ நடைபெறாமல் முடங்கியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அமைச்சர் இதில் நேரடி கவனம் செலுத்தி, நிலுவையில் உள்ள திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவினை நடத்திட வழிவகை செய்ய வேண்டும் என இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory