» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:25:46 PM (IST)

தூத்துக்குடியில் வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவினை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ஸ்ரீநாத்திடம் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் இராகவேந்திரா, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், இந்நாள் வரை கும்பாபிஷேகத் திருப்பணிகள் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன. திருப்பணிகள் நிறைவடையாத காரணத்தால், இத்திருக்கோவிலின் முக்கியத் திருவிழாவான ‘ஐந்து கருட சேவை’ நடைபெறாமல் முடங்கியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அமைச்சர் இதில் நேரடி கவனம் செலுத்தி, நிலுவையில் உள்ள திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக விழாவினை நடத்திட வழிவகை செய்ய வேண்டும் என இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரைவருக்கு வாயில் கத்திகுத்து: மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:07:10 PM (IST)

பாலியல் தொல்லை: எஸ்பியிடம் புகாரளித்த பெண் நிர்வாகி மீது தவெக மகளிர் அணி எதிர் புகார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:50:56 PM (IST)

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 3:25:35 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:45:53 PM (IST)

பசுமைத் தூத்துக்குடி: 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:30:39 PM (IST)









