» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுவில் பெயிண்ட் கலந்து குடித்த இளைஞர் பலி!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:14:27 AM (IST)

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மதுவில் பெயிண்ட்டைக் கலந்து குடித்த வாலிபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த குணசேகர் மகன் மணிகண்டன் (32). இவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அதிக மதுபோதையில் இருந்த அவர், வீட்டில் வைய்த்துத் தான் குடித்த மதுவில் பெயிண்ட்டைக் கலந்து குடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாகச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory