» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரிசார்ட் கட்டுமானப் பணியில் விபத்து : ஏணியிலிருந்து விழுந்து பீகார் வாலிபர் பலி!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 10:50:14 AM (IST)

தூத்துக்குடியில் ரிசார்ட் கட்டுமானப் பணியின் போது, ஏணியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் துறைமுகம் சார்பில் நியூ ஹார்பர் பகுதி கேம்ப்-1 எதிர்புறம் உள்ள கடற்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் கொற்கை ரிசார்ட்டில் பீகார் மாநிலம் அரியாரியா மாவட்டம் பெல்வா பகுதியைச் சேர்ந்த தபாரக் மமகன் சாஹெப் ராஜா (26), என்பவர் ஏசி டக்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு மேலிருந்து ஏணி வழியாகக் கீழே இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த தொழிலாளியை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தெர்மல் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory