» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரயிலில் தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகள் மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 8:46:43 PM (IST)



இரயிலில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 6.5 சவரன் தங்க நகைகளை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல்துறையினர், கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி மாரிஸ்வரி. இவர் தற்போது சென்னை முடிச்சூர், மேற்கு லட்சுமி நகரில் வசித்து வருகிறார். கடந்த நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4:50 மணிக்குக் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்த தாம்பரம் - கொல்லம் அனந்தபுரி விரைவு இரயிலில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பயணித்துள்ளார்.

அப்போது, அவசிய அவசரத்தில் மற்றொரு பயணி வைத்திருந்த அதே போன்ற கருப்பு நிற டிராவல் பையைத் தவறாக மாற்றி எடுத்துக்கொண்டு கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் அது தனது பை இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக ஆனந்தகுமார் அந்தப் பையைக் கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடை அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. பையினுள் 2 நெக்லஸ், 1 ஜோடி ஜிமிக்கி கம்மல், 1 ஜோடி காது மாட்டால் ஆகியவை இருந்தன. மேலும், அதில் சரவணா எலைட் ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் ரசீதும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு, நகையின் உரிமையாளர் சென்னை முடிச்சூரைச் சேர்ந்த மாரிஸ்வரி என்பதைக் கண்டறிந்து அவருக்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறையினரின் தகவலின் பேரில் இன்று (09.08.2026) தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் வந்த மாரிஸ்வரி, உரிய அத்தாட்சிகளைக் காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, சுமார் 6.5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. உரிய நேரத்தில் நகைகளைக் கண்டறிந்து ஒப்படைத்த தூத்துக்குடி இருப்புப்பாதை காவல்துறையினருக்குப் பயணியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory