» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கு: 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:25:31 PM (IST)

ஆறுமுகநேரி காவல் நிலைய கஞ்சா வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (23) ஆகிய இருவர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருந்தது. பொதுமக்களுக்கு இடையூறாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - வாலிபர் காவல் நிலையத்தில் சரண்!
திங்கள் 27, ஜூலை 2026 4:32:40 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 586 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 27, ஜூலை 2026 3:29:04 PM (IST)

வ.உ.சிதம்பரனாரை தரம் தாழ்த்தி சித்தரித்ததாக சர்ச்சை : சன் குழுமத்திற்கு சைவ வேளாளர் சங்கம் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 3:18:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு
திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:18:53 PM (IST)








