» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவர் கொலை வழக்கில் கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை: மனைவி கோரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 3:26:18 PM (IST)

தூத்துக்குடியில் தனது கணவர் கொலை வழக்கில் கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி தீரேஸ் நகரைச் சேர்ந்த சங்கரேசன் மனைவி சுகந்தி (39) என்பவர் தனது உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை தனது கணவர் சங்கர சேகரன் (43), மாதா நகர் அருகே மர்ம நபர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்ட சங்கர சேகரன் தாழ்த்தப்பட்டோர் பட்டியலைச் சேர்ந்தவர். ஆனால், இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எஸ்சி அல்லாத இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தொழில் போட்டி, சாதி வன்முறை மற்றும் சாதி அடிப்படையிலான வெறுப்புணர்வு ஆகியவை கலந்து இக்கொடூரக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு உட்பட்டது என்பதால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆருடன் கூடுதலாக எஸ்சி/எஸ்டி பிஓஏ சட்டப் பிரிவுகளின் கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கணவரின் திடீர் மறைவு தங்களது குடும்பத்தைப் பொருளாதாரம் மற்றும் மனநல ரீதியாக முற்றிலும் பாதித்துள்ளதாகவும், தங்களது குடும்பத்திற்கு உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும், வழக்கின் முன்னேற்ற அறிக்கையை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த மனுவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணியில் 60 மீனவர்கள் : கடற்கரையில் திரண்ட மக்கள்!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:45:00 PM (IST)

காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு: 5 மாணவர்கள் மீட்பு – 2பேரை தேடும் பணி தீவிரம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:49:22 PM (IST)

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:42:41 PM (IST)

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு
ஞாயிறு 26, ஜூலை 2026 3:08:20 PM (IST)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விசைப்படகு : மீனவர்கள் 9 பேர் உயிர்தப்பினர்!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:39:56 PM (IST)

நிலத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கட்டிடம் இடிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:26:09 PM (IST)








