» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விசைப்படகு : மீனவர்கள் 9 பேர் உயிர்தப்பினர்!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:39:56 PM (IST)

தூத்துக்குடி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது. படகிலிருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். நேற்று காலை, தருவைகுளத்தில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் சமையல் செய்யும் பணியின் போது எதிர்பாராதவிதமாகக் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.
தீ மளமளவெனப் படகு முழுவதும் பரவியதால், விசைப்படகு முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்தும், அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகின் உதவியோடும் தப்பித்தனர். மற்றொரு படகின் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றிப் பத்திரமாகக் கரை திரும்பினர். நடுக்கடலில் விசைப்படகு எரிந்து சாம்பலான சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணியில் 60 மீனவர்கள் : கடற்கரையில் திரண்ட மக்கள்!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:45:00 PM (IST)

காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு: 5 மாணவர்கள் மீட்பு – 2பேரை தேடும் பணி தீவிரம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:49:22 PM (IST)

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:42:41 PM (IST)

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு
ஞாயிறு 26, ஜூலை 2026 3:08:20 PM (IST)

நிலத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கட்டிடம் இடிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:26:09 PM (IST)

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)








