» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பொருட்காட்சி மைதானத்தில் மோதல் : தவெகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு!
திங்கள் 20, ஜூலை 2026 8:34:32 AM (IST)
.png)
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாப் பொருட்காட்சி மைதானத்தில் நாற்காலி, விளக்குகளை அடித்து நொறுக்கித் தகராறில் ஈடுபட்ட தவெகவினர் 10 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா வரும் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்தின் அருகே உள்ள மைதானத்தில் பொருட்காட்சிக்கான பந்தல் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சனிக்கிழமை இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரெனத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், டியூப் லைட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில், தவெகவைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தவெக தரப்பிலும் தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவிழா தொடங்கவுள்ள நிலையில் இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணியில் 60 மீனவர்கள் : கடற்கரையில் திரண்ட மக்கள்!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:45:00 PM (IST)

காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு: 5 மாணவர்கள் மீட்பு – 2பேரை தேடும் பணி தீவிரம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:49:22 PM (IST)

தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : தூத்துக்குடியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 7:42:41 PM (IST)

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு
ஞாயிறு 26, ஜூலை 2026 3:08:20 PM (IST)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விசைப்படகு : மீனவர்கள் 9 பேர் உயிர்தப்பினர்!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:39:56 PM (IST)

நிலத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கட்டிடம் இடிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:26:09 PM (IST)









BabuJul 20, 2026 - 07:08:03 PM | Posted IP 162.1*****