» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

எப்பொதும்வென்றான் அருகே சோலார் நிறுவனத்தில் மின் வயர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், சாரக் கம்பில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிதம்பரம் பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாரிக்காளை (47), பத்மாவதி சோலார் நிறுவனத்தில் மின் வயர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். குமரெட்டியாபுரம் விலக்கு அருகே, உயர் மின்னழுத்த மின் வயர்களுக்கு மேலாகப் புதிய மின் வயர்களைக் கொண்டு செல்வதற்காகக் கம்புகள் மூலம் சாரம் அமைத்து வேலை பார்த்து வந்தனர்.

பணிகள் முடிந்து சாரக் கம்புகளை அவிழ்க்கும் பணியில் மாரிக்காளை ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக நிறுவன வாகனத்தின் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர், மாரிக்காளை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்பொதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory