» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)
எப்பொதும்வென்றான் அருகே சோலார் நிறுவனத்தில் மின் வயர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், சாரக் கம்பில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிதம்பரம் பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாரிக்காளை (47), பத்மாவதி சோலார் நிறுவனத்தில் மின் வயர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். குமரெட்டியாபுரம் விலக்கு அருகே, உயர் மின்னழுத்த மின் வயர்களுக்கு மேலாகப் புதிய மின் வயர்களைக் கொண்டு செல்வதற்காகக் கம்புகள் மூலம் சாரம் அமைத்து வேலை பார்த்து வந்தனர்.
பணிகள் முடிந்து சாரக் கம்புகளை அவிழ்க்கும் பணியில் மாரிக்காளை ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக நிறுவன வாகனத்தின் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர், மாரிக்காளை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்பொதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' வார்த்தை நீக்கம்: இனி வெறும் 'மகளிர் பயணம்' மட்டுமே!
வியாழன் 9, ஜூலை 2026 3:59:16 PM (IST)








