» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாநகராட்சியில் துவக்கம்!
வியாழன் 9, ஜூலை 2026 12:52:59 PM (IST)

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்டக் களப்பணி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று துவங்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெற உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலப் பகுதிகளிலும் இப்பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 09.07.2026 முதல் 11.07.2026 வரை முதற்கட்டமாகவும், 13.07.2026 முதல் 15.07.2026 வரை இரண்டாம் கட்டமாகவும் என இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணியில் ஈடுபட உள்ள 376 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் களப்பணி பயிற்றுநர்களால் முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் வ.உ.சி கல்லூரி, ஏ.பி.சி.வி. மகளிர் கல்லூரி, பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிரேஸ் பாலிடெக்னிக், விக்டோரியா சி.பி.எஸ்.இ பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று துவங்கப்பட்டுள்ளன என முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)








