» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

வியாழன் 9, ஜூலை 2026 12:48:05 PM (IST)



தூத்துக்குடி  டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளித் தாளாளரும் செயலாளருமான எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் வழிகாட்டுதலின்படி தி ஐ பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இலவசக் கண் சிகிச்சை முகாமை தட்சண மாற நாடார் சங்க இயக்குநரும் பள்ளி நலக்குழு உறுப்பினருமான கே. லிங்கச்செல்வன், கே.ஏ.பி. சீனிவாசன், கே .கே. ஆர்.ஜெயக்கொடி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். 

இம்முகாமில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட மொத்தம் 684 பேர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். இதில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  அடுத்தகட்டமாகத் தேவையான இலவசத் தொடர் சிகிச்சைகளுக்கான முழு ஏற்பாடுகளும் பவுண்டேஷன் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory