» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: மேயர் தகவல்

புதன் 8, ஜூலை 2026 8:08:32 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் வரும் சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராக்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு வரும் வல்லநாடு தலைமை நீர்ரேற்று நிலையப் பகுதியில் கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வல்லநாட்டில் இருந்து குழாய்கள் மூலம் மாநகரப் பகுதிக்குக் கொண்டு வரப்படும் குடிநீரை, ஆங்காங்கே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முழுமையாக ஏற்றிச் சேமிக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாகவே மாநகரின் பல்வேறு வார்டுகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டு வருகிறது.

மாநகரப் பகுதியில் நிலவும் இக்குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான மாற்று மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருகிற சனிக்கிழமை முதல் மாநகர் பகுதி முழுவதும் வழக்கம் போல் தங்குதடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் முழுமையாகச் செய்யப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

கீதாJul 8, 2026 - 07:12:53 PM | Posted IP 172.7*****

அப்போ இந்த நாலரை வருசமா நீங்க இங்க என்னதான் பன்னிக்கிட்டு இருந்தீங்க தம்பி ஊரை ஏமாத்திக்கிட்டு இருந்தது உன்மைதானே அடுத்தமுறை தேர்தலில் கவுன்சிலராக கூட ஜெயிக்க மாட்டீங்க தம்பி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory