» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் ஜூலை 26ல் போதை ஒழிப்பு மாநாடு: அண்ணாமலை பங்கேற்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 5:01:52 PM (IST)
திருச்செந்தூரில் வருகிற 26ஆம் தேதி "We The Leaders" அமைப்பின் சார்பாக போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை முன்னிறுத்தி, "போதை அரக்கனை வென்று கொள்ள!" என்ற முழக்கத்துடன் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு அண்ணாமலை முதன்மை அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்.
இம்மாநாடு வரும் ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:00 மணிக்குத் திருச்செந்தூர் - திருநெல்வேலி மெயின் ரோடு, ஷபி டிரேடர்ஸ் எதிரே உள்ள மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளை "We The Leaders" அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 8:25:20 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
வியாழன் 9, ஜூலை 2026 8:17:29 PM (IST)

சாயர்புரம் ஜி.யு. போப் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 9, ஜூலை 2026 5:54:22 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ஆம் தேதி சிறப்பு முகாம்!
வியாழன் 9, ஜூலை 2026 5:40:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

விளாத்திகுளத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு : வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
வியாழன் 9, ஜூலை 2026 4:15:30 PM (IST)









Vasunanthanan RamaswamyJul 8, 2026 - 09:10:00 PM | Posted IP 162.1*****