» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநர் கைது!

திங்கள் 11, மே 2026 8:34:03 AM (IST)

கோவில்பட்டியில் 12 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட லாரி ஓட்டுநரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர் என்பவரது மகன் கருப்பசாமி என்ற விக்னேஷ் (29). இவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கோவில்பட்டி பகுதியில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, விக்னேஷ் மீது போக்சி சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று விக்னேஷைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory