» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு திடீரென காணாமல் போனது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குளி காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன் (68). கடல் தொழில் செய்து வரும் இவர், தனக்குச் சொந்தமான பைபர் படகை வழக்கம்போல் திரேஸ்புரம் கடற்கரையில் முட்டு அளவு தண்ணீரில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று மாலை 5:30 மணி அளவில் படகு கடற்கரையில் பாதுகாப்பாக இருந்துள்ளது. 

ஆனால், இன்று காலை 7:30 மணி அளவில் பரமசிவன் கடற்கரைக்குச் சென்று பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் படகு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, படகு காற்றின் வேகத்தில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது படகைத் திருடிச் சென்றனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காணாமல் போன சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

வேடிக்கை பார்ப்பவன்Apr 19, 2026 - 01:55:51 PM | Posted IP 162.1*****

சில மீனவர்கள் கடல் வளங்களை சுரண்டி ஆட்டைய போட்டுவார்கள், இன்று படகையே ஆட்டைய போட்டுட்டார்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory