» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு திடீரென காணாமல் போனது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குளி காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன் (68). கடல் தொழில் செய்து வரும் இவர், தனக்குச் சொந்தமான பைபர் படகை வழக்கம்போல் திரேஸ்புரம் கடற்கரையில் முட்டு அளவு தண்ணீரில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று மாலை 5:30 மணி அளவில் படகு கடற்கரையில் பாதுகாப்பாக இருந்துள்ளது.
ஆனால், இன்று காலை 7:30 மணி அளவில் பரமசிவன் கடற்கரைக்குச் சென்று பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் படகு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, படகு காற்றின் வேகத்தில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது படகைத் திருடிச் சென்றனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காணாமல் போன சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:55:13 AM (IST)






வேடிக்கை பார்ப்பவன்Apr 19, 2026 - 01:55:51 PM | Posted IP 162.1*****