» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)

குளத்தூர் அருகே மனைவி கோபித்துச் சென்றதால் வாலிபர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளத்தைச் சேர்ந்தவர் கென்னடி மகன் பின்போ (34). இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான பின்போ, அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனால் மன வேதனையில் இருந்த அவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory