» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)
கயத்தாறு அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 221 அரசு மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தாய் - மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா செட்டிக்குறிச்சி முத்துகிருஷ்ணன் காலனி பகுதியில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் கயத்தாறு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், கயத்தாறு உதவி ஆய்வாளர் காசிநாதன் மற்றும் போலீசார் இன்று அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் அருகே மண்ணுக்குள் மறைத்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 221 அரசு மதுபாட்டில்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் செட்டிக்குறிச்சி முத்துகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்த சுடலைமணியின் மனைவி முத்துலட்சுமி (35) மற்றும் அவரது மகன் இசக்கிப்பாண்டி (19) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கள்ளச்சந்தையில் விற்பனைக்காக மதுபாட்டில்களைப் பதுக்கியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:55:13 AM (IST)





