» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)
ஆசாரிப்பள்ளம் மேலப்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள 332 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி வீரராக நுழைந்ததை நினைவு கூரும் 'குருத்தோலை ஞாயிறு' திருநாள் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் முக்கிய வாரமான 'புனித வாரம்' இன்று முதல் தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களில் ஒன்றான, ஆசாரிப்பள்ளம் அடுத்த மேலப்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள 332 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் இன்று காலை முதலே சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
ஆலய வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள், தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, பக்திப் பாடல்களைப் பாடியபடி தேவாலயத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் மக்கள் இயேசுவை வரவேற்ற நிகழ்வை இது நினைவூட்டும் வகையில் அமைந்தது.
பவனியைத் தொடர்ந்து ஆலயத்தில் விசேஷ கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் குடும்ப நலன் மற்றும் வளம் வேண்டியும், சமூக ஒற்றுமை நிலைக்க வேண்டியும், நாட்டின் அமைதி மற்றும் நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்தனர். புனித வாரத்தின் தொடக்கமான இன்று மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ தேவாலயங்களிலும் இதேபோன்ற குருத்தோலை பவனிகள் நடைபெற்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)

ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)







