» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)
தூத்துக்குடி பஜார் பகுதியில், சட்டவிரோதப் புகையிலை விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை போலீசார் கைது செய்து, சுமார் 14 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி நிவேதா தலைமையிலான போலீசார் நேற்று பஜார் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்தது.
அந்தக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 கிலோ 851 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பிடிபட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் 19,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31) என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த வடபாகம் போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)

தேர்தல் முடிந்தால்தான் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியும்: தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:19:18 PM (IST)







