» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!

ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)

தூத்துக்குடி பஜார் பகுதியில், சட்டவிரோதப் புகையிலை விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை போலீசார் கைது செய்து, சுமார் 14 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி நிவேதா தலைமையிலான போலீசார் நேற்று பஜார் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்தது.

அந்தக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 கிலோ 851 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பிடிபட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் 19,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31) என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த வடபாகம் போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory