» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் நடத்தை விதிமுறை: தூத்துக்குடியில் ரூ.36.10 லட்சம் பணம்; ரூ.2.20 லட்சம் பொருட்கள் பறிமுதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:08:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.36.10 லட்சம் ரொக்கம், ரூ.2,20,280 மதிப்புள்ள இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பன்னம்பாறை விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை குழுவினர் இன்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த கார், வேன் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி, உரிய ஆவணங்களின்றிப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் - தேர்தல் அலுவலர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளில், இன்று (மார்ச் 22) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.36,09,880 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை: ரூ.36,09,880
கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு: ரூ.2,20,280
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ.20,432
ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தொகை: ரூ.15,27,780
தேர்தல் நன்னடத்தை விதிகளை மதித்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








