» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள், நீர் தின விழா
சனி 21, மார்ச் 2026 5:25:17 PM (IST)

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் மற்றும் நீர் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் ஆண்டுதோறும் மார்ச் 21-ம் தேதி உலக காடுகள் தினமும், மார்ச் 22-ம் தேதி உலக நீர் தினமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், தற்போது பெருகி வரும் தண்ணீர் தேவை மற்றும் உலக அளவில் மாறிவரும் புவி வெப்பமயமாதல் குறித்த முக்கியக் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன் மற்றும் உதவித் தலைவர் (உற்பத்தி) சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கிச் சிறப்பித்தனர்.
பசுமைப் பணிகள்விழாவின் ஒரு பகுதியாக, தொழிற்சாலையின் SIOPP வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் ISO தரச்சான்றிதழ் தணிக்கையாளர்கள் கேப்டன் பாலசுப்பிரமணியன், ராஜகோபால், நாகராஜன் மற்றும் ஆலையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலையில் பராமரிக்கப்பட்டு வரும் பசுமைச் சூழலை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
இவ்விழாவில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சிறப்புகளை விளக்கும் "DCW & Biodiversity” என்ற புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைப் பார்வையிட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் சுற்றுச்சூழல் துறை பொது மேலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்புத் துறை, சிவில் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இணைந்து செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








