» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)
தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது அலகில் ஏற்பட்ட டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு அலகுகள் செயல்படாத நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பாதிப்பால் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்குச் சொந்தமான தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. ஒவ்வொரு அலகும் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இந்த இரு அலகுகளிலும் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் 420 மெகாவாட் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு அலகுகள் மூலம் தற்போது 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு டர்பைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த அலகிலும் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது 5 அலகுகளில் 3 அலகுகள் முடங்கியுள்ளதால், ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 630 மெகாவாட் குறைந்துள்ளது.
தற்போது 420 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, மின்சாரத் தேவை உயர்ந்துள்ள சூழலில், இந்தத் திடீர் உற்பத்திப் பாதிப்பு மின்வெட்டு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. பழுதான 5-வது அலகைச் சீரமைக்கும் பணியில் மின் வாரியப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








