» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் 'தேடல்' புத்தகத் திறனாய்வு விழா
சனி 21, மார்ச் 2026 10:39:09 AM (IST)

கோவில்பட்டியில் 'இலக்கியச் சாரல்' மற்றும் 'சகாராவைத் தாண்டாத ஒட்டகம்' கல்வி நிறுவனம் சார்பில், எழுத்தாளர் இராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய 'தேடல்' புத்தகத்தின் திறனாய்வு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தியான பயிற்சி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, நல்லாசிரியர் ப. ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். விஸ்வாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் 'ஞான ஒளிமலர்' இந்திராணி அம்மா மற்றும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி இசை எப்.எம். இயக்குநர் மற்றும் மேனாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் 'தேடல்' நூலினைப் பற்றிப் இலக்கிய ஆளுமைகள் முனைவர் முருக சரஸ்வதி, இராதா (தமிழாசிரியர்), முனைவர் கி. பிரபு (முதல்வர்), நல்லாசிரியர் ராஜசேகர் (தமிழாசிரியர்), கவிஞர் ஜெ. பார்த்திபன் ஆகியோர் விரிவான திறனாய்வு உரைகளை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக, நூலாசிரியர் இராஜேஷ் சங்கரப்பிள்ளை ஏற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் கழுகு மலை திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன், கோவில்பட்டி கம்பன் கழகச் செயலாளர் சரவணச் செல்வன், தலைவர் முத்துப்பாண்டியன், சிறார் கலை இலக்கிய சங்க செயலாளர் மணிமொழி நங்கை, பொருளாளர் கண்ணகி, கவிஞர் போத்திராஜ், எழுத்தாளர் இராஜலட்சுமி, திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








