» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)

பசுவந்தனை அருகே காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 800 கிலோ எடையுள்ள பட்டாசு தயாரிப்பு வெடிமருந்து பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத வெடிமருந்து விற்பனை மற்றும் பட்டாசு தயாரிப்பு நடப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், நேற்று (07.03.2026) லக்கமாள் தேவி பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் அமைக்கப்பட்டிருந்த ஒரு கொட்டகையை போலீசார் சோதனையிட்டனர். அங்குச் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து சுமார் 300 கிலோ கரி மருந்து, 200 கிலோ கரித்தூள் மற்றும் 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பிகள் என மொத்தம் 800 கிலோ பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகப் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெடிபொருட்களைப் பதுக்கிய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில்: "தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதோ அல்லது வெடிமருந்துகளைப் பதுக்கி வைப்பதோ சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முறையான அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளும் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்"
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







