» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் நிலவும் சகோதரத்துவத்தையும் மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
"எல்லோருக்கும் எல்லாம்" என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். மக்களின் உணவு மற்றும் உடை சுதந்திரத்தில் தலையிடும் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். வரும் தேர்தலில் முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கை விடக் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து மதத்தைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)







