» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!

திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

சாத்தான்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தலைமைக் காவலர் பலத்த காயமடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் ராஜா மனைவி ரோஸ்லின். இவர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பத்தன்று காலை, ரோஸ்லின் தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்குப் புறப்பட்டார். 

சாத்தான்குளம் கருமேணி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டி மீது மோதியது. இந்த விபத்தில் வண்டி நிலைதடுமாறி கீழே விழுந்த ரோஸ்லின் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தலைமைக் காவலர் ரோஸ்லின் அளித்த புகாரின் அடிப்படையில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் மணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory